பிரம்ம முகூர்த்தம்ன்னா என்னன்னு தெரியுமா?!

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் நன்மையில் முடியும், அந்த நேரத்தில் படித்தால் எளிதில் மனதில் படியும், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துக்கொள்வதை வழக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என நம்ம பெரியோர்கள் சொல்வாங்க. பிரம்ம முகூர்த்த நேரம் எதுன்னு நம்மில் பலருக்கு தெரியாது. இனி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

b01350bdf0fb1815935cf10a9c323ce5

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான நேரத்திற்கே பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதான்! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறுப்பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று கருத்தில் கொள்ளலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் எனப்பெயர் வைத்துள்ளார்கள்.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் என எதுவும் கிடையாது. இது எப்போதுமே சுபவேளைதான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான் . பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும்.

இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது. அதனால்தான் அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.
நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை படித்திருக்கின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக அந்த சக்தியினை முழுமையாய் மனம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் ஆய்ந்து கூறும் இத்தகவலை அன்று அஞ்ஞானம் அனுபவப்பூர்வமா சொல்லி, செயலில் செய்து காட்டி வெற்றியும் கண்டுள்ளது.

அதனால், அனைவரும் பிரம்மமுகூர்த்தில் துயில் எழுவதை வழக்கமாய் கொள்வோம்! வாழ்வில் வெற்றி காண்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews