சினிமா திரையுலகில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜூலி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நிறைய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த ஜூலிக்கு அவருடைய காதலர் டாட்டா காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு காதலன் செல்லவேண்டாம் என கூறியதாகவும் இதனை ஏற்காத ஜூலி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது. இதன் பிறகு ஜூலியில் லைஃப்ஸ்டைலும் மாறியது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி முன் நடுத்தர குடும்பதை சேர்ந்த பெண்ணாக வலம் வந்த ஜூலிக்கு அந்நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பார்ட்டிகள் தலைதூக்க ஆரம்பித்து உள்ளனர். குறிப்பாக சினிமா வாய்ப்புகளுக்காக இரவு பார்டிகளில் ஜூலிக்கு அழைப்புகள் வருவதாகல் காதலனை ஏமாற்றி விட்டு அங்கு சென்றதால் பிரிவு ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
இதன் பிறகு சினிமா வாய்ப்பிற்காக தனது அலங்காரங்களை மாற்றிக்கொள்ள சலூனுக்கு சென்றதாகவும் அப்போது அங்கு பணியாற்றி வந்துள்ள மணிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு மணிஷ் மீது ஜூலி காதலில் விழுந்துள்ளார். குறிப்பாக இருவரும் திருமணம் செய்யாமல் குடித்தனம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.
இந்த சூலில் இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் தற்போது திரையுலக நடிகரின் வாரிசுக்கு ஜூலிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மணிஷ் லிவ்விங் டூ கெதரில் இருந்த போது ஜூலி மணிஷ்க்கு நிறைய பணம், நகைகள் கொடுத்தாக காவல்நிலையத்தில் புகார் அழித்துள்ளார்.
இதனால் பதறிபோன மணிஷ் உடனடியாக காவல்நிலையத்திற்கு வந்து அதிக பணம் கொடுத்தாக தெரிகிறது. தற்போது ஜூலி 3 வது காதலுக்கு ரெடியாகி விட்டதாக விஜய் டிவி பிரபலங்கள் கூறுகின்றனர்.