நடிகர் சிவகார்த்திகேயனை அறியாதோர் இல்லை. விஜய் டிவியில் கலக்க போவது யாரு ப்ரோகிராமில் தனுஷ், எஸ்.ஜே சூர்யா போன்றோரை மிமிக்ரி செய்து வித்தியாசமான கிரியேட்டிவிட்டியுடன் இவர் தொடர் நிகழ்ச்சி செய்ததால் சீக்கிரமே புகழ்பெற்றார் அந்த நிகழ்ச்சியின் வின்னராக முதன் முதலில் 5 லட்சம் ரூபாயையும் வென்றார்.
தொடர்ந்து பாண்டிராஜ் மெரினா படத்தில் நடிக்க அழைக்க அதற்கு பிறகு நடந்த சமாச்சாரங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அவரது கால்ஷீட்டுக்கு தவம் கிடப்பவர்கள் ஏராளம். ஜாலியாக இவர் நடிப்பதால் இவருக்கு குழந்தைகள், பெரியவர்கள் என அதிக ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் 2019ம் ஆண்டின் சிறந்த மனிதராக அனைவராலும் விரும்பப்படும் மனிதராக சிவகார்த்திகேயனை சென்னை டைம்ஸ் ஆங்கில இதழ் தேர்வு செய்துள்ளது.
இதற்காக சிவா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.