மீன் வளத்தைப் பாதுகாக்க, 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மீன்பிடித் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை கிழக்குக் கடற்கரையிலும், ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மேற்குக் கடற்கரையிலும் தொடங்குகிறது.
மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு ஆணையர் கே.எஸ்.பழனிசாமி கூறியது: என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் தமிழக எல்லையில் இருந்து ஆந்திர மாநில கடற்பகுதிக்குள் நுழையக்கூடாது. தடையை மீறி மீன்பிடிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மீனவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களிலும் மீன்பிடி தடை காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட வேண்டும்.
“எனவே, மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன் படகுகள் கரை திரும்ப உத்தரவு , கடலுக்கு சென்ற மீன்பிடி படகுகள் 14ம் தேதி (இன்று) நள்ளிரவுக்குள் கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு சென்றவர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – ஸ்டாலின்
மேலும், “”மீன்பிடி தடைக்காலம் துவங்கி கரை திரும்பும் விசைப்படகுகள் பற்றிய விவரங்களை, அதாவது, 14ம் தேதி நள்ளிரவுக்கு பின், தலைமை அலுவலகத்தில் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.கரைக்கு திரும்பாத படகுகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.