எந்த தீய சக்தியும் இனி உங்களை நெருங்கவே நெருங்காது….! இதை மட்டும் கடைபிடித்து வந்தால் போதும்…!

நாம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் நமக்கும் எதிரிகள் என்று கண்ணுக்குத் தெரியாமல் யாராவது இருப்பார்கள். எதிரியே இல்லை என்றாலும் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. எதிரின்னு ஒருவர் இருக்கும்போது தான் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதனால் எதிரிகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். எதிரிகளைக் கூட நாம் சமாளித்து விடலாம்.

ஆனால் தீய சக்தியை சமாளிப்பது என்பது ரொம்பவே கஷ்டம் தான். பில்லி, சூனியம், ஏவல் என்று தீய சக்திகள் நமக்கே தெரியாமல் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களைக் கொடுக்கும். இது ஏன் நமக்கு மட்டும் நடக்கிறது என்று அப்போது தான் புலம்பித் தவிப்போம்.

குடும்பப் பிரச்சனைகள், வியாபார நஷ்டம், தொழிலில் மந்தம் என்று நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்க்கும் போது நம்மால் அவற்றை ஜீரணிக்க முடிவதில்லை. எப்படி இருந்தாலும் அதையும் சமாளித்துத் தானே ஆக வேண்டும். தீய சக்தியில் இருந்து நாம் மீள்வதற்காக சில யுக்திகளைப் பார்ப்போமா…

ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது. நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது. கமண்டலத்தில் உரு ஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும். என்ன இதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கேன்னு பார்க்குறீங்களா… இன்னும் நிறைய இருக்கு. தொடர்ந்து படிங்க.

அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும். இருபக்கமும் மூச்சுக் காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும். வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும். வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.

Mayil iragu
Mayil iragu

வலதுகை மணிகட்டில் ஒரு கயிற்றினை இறுக மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும். பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும், வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும், மயில் இறகை கையில் வைத்திருந்தாலும், ஏதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும் தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.

எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும், அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதைக் காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும். உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும். அண்டாது.

துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர். ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும். நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.

பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது. பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும். நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.

பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும். அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும். தீயசக்தியும் விலகிவிடும்.

Udukkai
Udukkai

மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது. விலக வழி கிடைக்கும். இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.

கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும். நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.

சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும். வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.

தலைமுடியை கண்ட இடங்களில் போடவேண்டாம். முடிவெட்டும்போது முடி விழத்தான் செய்யும். ஆனால் அங்கு வேறொருவரின் முடியுடன் நம் முடி கலந்துவிட்டால் சூன்யம் வேலை செய்யாது. உங்கள் அழுக்கு துணியை பத்திரமாக வைத்து துவைத்து விடுங்கள்.

விரோதி கையில் சிக்கும்படி வைக்காதீர்கள். உங்கள் அழுக்கு துணி மற்றவர் வியர்வையில் பட்டால் கூட நீங்கள் வசியமாகி விடுவீர்கள் கவனம். வெளியில் சாப்பிடாதீர்கள். வாராவாரம் திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். தெய்வ பிராத்தனையை எப்பொழுதும் கைவிடாதீர்கள்.

சூரியசக்தியை உடலில் பெருக்கிக் கொள்கிறவர்களுக்கு திருஷ்டி, சூன்யம் அண்டாது. யார் தொடுத்தாரோ அவரையே திருப்பி தாக்கிவிடும். அதனால்தான் சூரியன் அம்சமான சிம்மராசி லக்கனம் மற்றும் சூரிய நட்சத்திரக்காரர்களை எவர் ஒருவர் திருஷ்டி, சூன்யம் வைத்து செய்தாலும் வைத்தவரையே திருப்பி தாக்கிவிடும்.

பிரம்ம ரிஷிகளான துர்வாசர், விசுவாமித்திரர், வசிஷ்;டர் போன்ற ரிஷிகளின் ஆசியால் அரிய சக்தி கொண்டவர்களை தாக்குபவர்கள் அவர்களையே பன்மடங்கு தாக்கிக் கொண்டதற்கு சமமான கெடுபலன் விளையும் என ஆசி வழங்கியுள்ளதால் சூரியசக்திக்கு எதிர்சக்தி இல்லாமல் போனது. சூரிய சக்திகாரர்கள் தன் வினையில் மட்டுமே தன்னை அழித்துக்கொள்ள முடியும். எனவே மெய் அன்பர்கள் சூரிய வழிபாட்டின் மூலம் சூரியசக்தியை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

Sun worship
Sun worship

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள். எல்லாம் நலமாய் அமையும். தீயசக்திகளை பிறருக்கு விரட்ட செப்பு தகட்டில் கோரப்பல் தெய்வங்களின் மந்திரத்தை மனதால் தியானிக்க வேண்டும். பின்னர் ஒரு முக்கோணம் கீறி அதன் மூன்று முனைகளிலும் சூலம் கீற வேண்டும்.

முக்கோண மத்தியில் தெய்வத்தை நினைத்து ஓம் என்று எழுதி அதை தாயத்தில் அடைத்து பாதிக்கப்பட்டவரை கட்டிக்கொள்ளச் சொன்னாலே போதும். தீயசக்தி விலகிவிடும். அல்லது மேற்படி முதலில் கூறிய சில வழிமுறைகளை கடைபிடிக்கச் சொன்னாலே போதும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews