நம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.
இருப்பினும் கூட ஒரு சில மாவட்டங்களுக்கு அதிக கன மழை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது. அவற்றுள் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கும்.
இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் மூன்றாம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுமுறையை தற்போதே அறிவித்துள்ளார்.