ஆசியக்கோப்பை யாருக்கு? இன்றைய இறுதிப்போட்டியில் இலங்கை-பாகிஸ்தான்!!

தற்போது கிரிக்கெட் உலகில் ஆசிய கோப்பை மிகவும் தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை பாகிஸ்தான் உட்பட மொத்தம் ஆறு ஆசிய நாடுகள் பங்கேற்றன.

ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இந்த தொடர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக தெரிகிறது. ஏனென்றால் இந்தியா சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் மோதி தோல்வியை தழுவியது.

இருப்பினும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த ஆசிய கோப்பை  இறுதி போட்டியானது இன்றைய தினம் நடைபெறுகிறது. போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் இரண்டு அணிகள் இன்று பல பரிட்சை மேற்கொள்கின்றன.

துபாயில் இன்று இரவு 07:30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்போடு பயிற்சி எடுத்துக் கொண்டு வருவதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.