அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அதிதீவிரம் காட்டும் பாஜகவினர்..

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவி லாவண்யா(17 வயது), இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தங்கிருந்த விடுதியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது தற்கொலைக்கு விடுதியின் வாடன் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போன்ற அரசியல்
வட்டாரங்கள் குற்றம்சாட்டி போராட்டத்தையும் நடத்தினர்.

இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஒரு குழுவை அமைத்து அந்த குழுவினர் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விவரங்களைச் சேகரித்து அறிக்கையாக வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

அந்த வகையில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. சந்தியா ராய், தெலுங்கானா முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி, மகாராஷ்டிராவின் சித்ரா மற்றும் கர்நாடகாவின் கீதா ஆகியோரை இடம்பெற்று இருந்தனர்.

இவர்கள்  மாணவியின் பெற்றோர், சகோதரர்களிடம் நேரில்சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Capture

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment