கடந்த டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் சின்னத்திரை நடிகை சித்ரா.
மிகவும் தைரியமான பெண்ணான அவர் ஏன் திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
அண்மையில் தான் சித்ராவின் கணவர் ஹேமந்தின் சந்தேக குணம், கொடுமைப்படுத்தியதாலும் அவர் இந்த முடிவு எடுக்க காரணம் என்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை சித்ராவின் ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வேடத்தில் அவர் மற்றும் கதிர் இருக்கும் புகைப்படங்களை வைத்து மயிலாடுதுறையில் ஒரு டீ கடை உரிமையாளர் கடை பேனர் வைத்துள்ளார்.