கொரோனா வைரஸ் தொற்று அனைத்துத் தொழில்களையும் முடங்கி உள்ள நிலையில் ஊடகத் துறை மட்டுமே வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றது.
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் என்னை 10 நாட்களுக்கு சேனலில் பார்க்கமுடியாது என்று கூற ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர்.
அனிதா சம்பத்திற்காகவே செய்திச் சேனலை வளைத்து வளைத்துப் பார்த்த இளைஞர்கள் ஏராளம். இவர் திடீரென பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள் சோகத்தில் மூழ்கினர்.
கொரோனா ஊரடங்கிலும் பணியை தொடர்ந்து செய்துவந்த அனிதா சமீபத்தில் ட்விட்ட்ரில் “கொரோனா பரவி வரும் காரணத்தினால் வீட்டில் உள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளதாகக் கூறினார்.
இதனால் வீட்டில் ஓய்வில் இருந்துவரும் அவர், யூடியூப்பில் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்துவருகிறார், நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறுவயதில் தனது தோழி எழுதிய கடிதத்தை பதிவிட, அது பல லட்சக்கணக்கிலான லைக்குகளைப் பெற்றுள்ளது.
2007 ஆம் ஆண்டு தோழி காயத்ரி அனிதா சம்பத் குறித்து எழுதியதாவது, “அனிதா பள்ளிக்கூடத்தை விட்டு செல்வது தனக்கு வருத்தமளிப்பதாய் உள்ளது” என்று எழுதியுள்ளார். நன்றி கூறும் விதமாக, “இந்தக் கடிதத்தை 13 ஆண்டுகள் கழித்து என் தோழி காயத்ரி இப்போது இதை எனக்கு அனுப்பி என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் என்று அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.