காவல்துறையினருக்கு பாட்டுப்பாடி நன்றி சொன்ன ஆண்ட்ரியா!!

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணம் உலகின் பல நாடுகளில் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது,  அந்தவகையில் இந்தியாவிலும் ஊரடங்கானது முதல் கட்டமாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையிலும், அடுத்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கி மே 3 ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக மே 3 ஆம் தேதி துவங்கி மே 17 ஆம் தேதி வரையிலும் தற்போது நான்காம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரையிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தால் படப்பிடிப்புகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் போன்றோர் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர்.

52b1ab97f35b68758c934dac09ac436b

அவர்களுக்கு நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் நன்றியினைப் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில்

நடிகை நடிகை ஆண்ட்ரியா ட்விட்டரில் காவல்துறையினருக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதாவது வீடியோவில், “நாட்டு மக்களுக்காக உங்களின் இந்தப் பயணம் அளப்பரியதாக உள்ளது. நாங்கள் அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். மிகப்பெரிய நன்றி. உங்களின் உழைப்பு வீணாகாத வண்ணம் விரைவில் நாம் இயல்பு நிலைக்குத் திரும்புவோம்” என்று நன்றி கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.