“ஈபிஎஸ் வசமாகிறது” அதிமுக தலைமை அலுவலகம் – அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுக ஒற்றை  தலைமை விவகாரமானது  விசுவரூபம் எடுத்திருக்கும் சூழலில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக தரப்பிலிருந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் சீலை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது இன்று அமர்வுக்கு வந்தது.

தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் சீலை அகற்றி இபிஎஸ் தரப்பினரிடம் சாவியை கொடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரு மாதத்துக்கு தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment