வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதம் ஆனதால் விதிக்கப்பட்ட அபராததை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் 65 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை அடுத்து விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் 7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
இதனிடையே வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலமான 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு வணிகவரித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், 2019 ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என கூறியது.