நகை கடன் தள்ளுபடியில் வட்டி செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை – ஐ. பெரியசாமி
கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களிடன் வட்டி செலுத்த வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூட்டுறவு சங்கங்களின் நகைகடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இறுதி பட்டியலை பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த கூட்டுறவு சங்க பலகையில் ஒட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
2021- ஆண்டு ஜனவரி 31- ம் தேதி வரையில் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் இதற்கான வட்டியினை அரசே கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரையில் 13 லட்சம் மேற்பட்டவர்கள் நகைகடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
