
பொழுதுபோக்கு
குஷி திரைப்படத்தில் சமந்தாவிற்கு விபத்தா ??.. படக்குழுவினர்கள் விளக்கம் !!..
தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையான சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ‘குஷி’ படத்திற்காக இணைந்துள்ளனர்.இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஹ்ரிதயம் படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிடடோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இராணுவ பின்னணியில் காதல் கதைக்களத்தில் ரொமான்டிக் காமெடி ஜானரில் படம் அமைக்கப்படுகிறது. காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி டிசம்பர் மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போழுது நேற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைந்ததாகவும் படக்குழுவினர் அறிவித்தது. குஷி படப்பிடிப்பின்போது காஷ்மீரில் விபத்து ஒன்று ஏற்ப்பட்டதாகவும் அதில் விஜய் தேவர்கொண்டாவிற்க்கும் சமந்தாவிற்க்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இந்த தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக உள்ளது.
அதை படக்குழுவினர்கள் மறுத்ததாகவும் பேசப்படும்போது படக்குழுவின் இயக்குனர் ட்விட்டரில் இது எல்லாம் தவறான செய்தி என்று மறுத்துள்ளார். தவறான வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் இதையெல்லாம் நம்ப வேண்டாம் என கூறுகிறார்.
படக்குழு,குஷி திரைப்படத்தின் போது விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை படப்பிடிப்பு காஷ்மீரில் 30 நாட்களாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
சூட்டிங் முடிந்து சென்னை திரும்பினாரா தளபதி விஜய்?.. வெளியான புகைப்படம்!!..
