ஆதார் எண் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் விதிகள் திருத்தச் சட்டம், 2021ன் படி, வாக்காளர் தகவல்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 2021 ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 2023ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் வாக்காளர் அடையாள எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கத் தொடங்கினர். இந்நிலையில், கடந்த 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அடுத்த ஆண்டு வரை நீட்டித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க https://WWW.nvsp.in மற்றும் https://votersportal.eci.gov.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும், Voters Helpline Mobile App போன்ற ஆப்ஸ் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
மேலும், ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் கொடுத்து, வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.