சிலிண்டர் வெடித்தும் உயிர் போகவில்லை என தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட பரிதாபம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்ட பொழுது அவரை காப்பாற்ற சென்ற இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகர்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் வயது 38 இவர் திருமணமாகி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சம்பந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக மன அழுத்தம் காரணமாக மனைவியிடம் தகராறு செய்துவிட்டு மதனிப்பட்டி பகுதியில் வசிக்கும் அவரது அக்கா முத்துமாரி வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அக்கா முத்துமாரி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து இருவரும் வேலைக்கு சென்று நிலையில் வழக்கம்போல் அக்கா வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த அவர் அக்கா முத்துமாரி வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமையல் எரிவாயு வாடை தெரு முழுவதும் பரவியுள்ளது இதனை கண்ட அப்பகுதி மக்கள் மக்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்ததில் கோபாலகிருஷ்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, ராமசுப்பு ஆகிய இருவரும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவினை இயந்திரம் கொண்டு அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது டிரில்லிங் மிஷினில் இருந்து நெருப்பு பொறி வெளியேறி ஏற்கனவே வீட்டில் கசிந்திருந்த சமையல் வாயுடன் இணைந்து பெரும் வெடித்து சிதறியது.

கோபாலகிருஷ்ணனை காப்பாற்ற சென்ற கருப்பசாமி மற்றும் ராமசுப்பு தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இராஜபாளையம் தீயணைப்பு துறை இருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உடலில் 50 சதவீத தீ காயங்களுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த கோபாலகிருஷ்ணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அருகில் இருந்த அவர் தங்கை வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டு வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் பரவிய நெருப்பை அணைக்க வந்த தீயணைப்புத் துறையினர் இது குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தெற்கு காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment