தமிழகத்திற்கு ₹7054 கோடி நிதி ஒதுக்கீடு..!! மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?
நம் தமிழகத்தில் தற்போது பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 54 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி மின்சாரத் துறையின் சீரமைப்பு பணிகளுக்காக மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாட்டிற்கு இவ்வகை நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு ரூபாய் 28 ஆயிரத்து 204 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறை சீரமைப்புக்காக ரூபாய் ஓரு லட்சத்து 22 ஆயிரத்து 550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் மின்சார துறையில் உள்ள பல்வேறு விதமான பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகமெங்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
