News
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6495 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 422,085 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னையில் இன்று மட்டும் 1249 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,436 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 94 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 7231 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 6406 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 362,133 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 80,100 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 45,79,770 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
