கண் இமைக்கும் நொடியில் நடந்த கோரவிபத்து; 6 பெண்கள் உடல் நசுங்கி பலி!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் தல்லாரேவு பைபாஸ் சாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தாளரேவு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பேருந்து அதிவேகத்தில் வந்ததால் வளைவில் கட்டுபாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தனியார் பேருந்து மோதிய போது ஆட்டோவில் 8 பேர் இருந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பான முழு விவரங்களும் இறந்தவர்களின் விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.