5 முறை சாம்பியன் ஆறாவது முறையாக தோல்வி!! Play-offக்கு நுழையுமா மும்பை?

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 10 அணிகள் உள்ளன. அதன்படி லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் புதியதாக களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியில் ஜாம்பவானாக திகழும் மும்பை அணி ஜொலிக்கவில்லை என்று கூறலாம். மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி எவ்வாறாவது வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியடைந்துள்ளது.

அதன்படி இன்று மும்பை லக்னோ அணியோடு பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 199 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது. இதனால் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்போடு மும்பை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

ஆனால் எதிர்பார்த்த வண்ணமாக மும்பை அணிக்கு இந்த போட்டியும் பெரும் சவாலாக இருந்தது எனவே 20 ஓவர் முடிவில் மும்பை அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்துள்ளது.

இதனால் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் மும்பை அணி காணப்படுவது மும்பை ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. மும்பை அணி ஆடிய அனைத்து  போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் playoff நுழையும் வாய்ப்பு மெல்ல மெல்ல இழந்து கொண்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...