Tamil Nadu
மீண்டும் சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கையும் உயர்வதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 6000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் தினமும் 1200க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அதேபோல் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5958 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 397,261 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இன்று மட்டும் 1290 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 338,060 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 118 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 6839 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5606 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 117,915 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 73631 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 397,261 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
