தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாநில வாரிய மாணவர்களுக்கான முதல் தேர்வு பகுதி 1 மொழி தேர்வுடன் இன்று தொடங்கியது. மாணவர்களும் தேர்வை ஆர்வத்துடன் எழுதி வந்தனர்
இந்நிலையில் 8.51 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியதில், 50,674 மாணவர்கள் இன்றைய தேர்வுக்கு வரவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது.
பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் , ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வின் போது 4-5% மாணவர்கள் வராமல் இருப்பது வழக்கம். மேலும் அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளிகளுக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கில மொழியாக அடுத்த புதன்கிழமை (மார்ச் 15) தேர்வு நடைபெறும். தேர்வுக்கு பின் தாள் திருத்தங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கும் மற்றும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை 48,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
டார்ச்சர் கொடுத்த நிறுவன மேலாளர்; உப்பள தொழிலாளி எடுத்த பகீர் முடிவு… சிக்கியது உருக்கமான கடிதம்!
தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.