உத்தராகாண்ட் மாநிலத்தில் ஒரே சிறையைச் சேர்ந்த 44 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹல்த்வானியில் உள்ள சிறையில் 1,629 ஆண் கைதிகளும், 70 பெண் கைதிகளும் உள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் ஒரு பெண் கைதி உட்பட, 44 பேருக்கு 44 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
சிறையில் எச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, எச்ஐவி பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகமும் கைதிகளின் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கைதிகளின் சிகிச்சை குறித்து டாக்டர் சிங் கூறுகையில், “எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனது குழுவினர் சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
சிறையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.