4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு… தமிழக அரசு அதிரடி!
தமிழ்நாடு காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்கு ஏடிஜிபி பதவியிலுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள அமரேஷ் பூஜாரி, சைபர் குற்றப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் ஏடிஜிபி ரவி, தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் ஆணையராக உள்ள ரவி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
காவல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையின் கூடுதல் டிஜிபியாக உள்ள கருணாசாகர், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
