ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: இவர்களுக்கு மட்டும் தான் பயன் !!
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி 34% சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3% அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே டெல்லியில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களுக்கு 3% உயர்த்தி 34% வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், எரிபொருட்களின் விலை உயர்வு பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில் அகவிலைப்படியை உயர்த்தி இருப்பது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சற்று நிவாரணமாக அமைந்துள்ளது.
