
தமிழகம்
எச்சரிக்கை! தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்?
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் என கூறியுள்ளது.
அதோடு வடதமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை. மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
