இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாட்டை கொண்டுவந்தது. ஆனாலும் கொரோனாவின் தாக்கத்தை இன்னும் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
இதனை தொடர்ந்து உருமாறிய ஒமைக்ரான் அதிகரித்ததால் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 16ம் தேதியிலிருந்து மே 6ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.