அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

நம் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தாக்கம் மிகுந்த தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்து கொண்டு வருகின்றன. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறிப்பிட்ட 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment