நம் வீட்டு சமையல் அறையின் ராணியாக வேண்டுமா? எளிமையான 10 டிப்ஸ்

நாம் வீடுகளில் சமைக்கும் போது சில நேரங்களில் சுவை சிறப்பாக அமைவதில்லை, அதற்கு காரணம் சின்ன சின்ன விஷயங்கள் தான், அதை மாற்றும் போது சுவை சிறப்பாக அமைப்பும். எளிமையான 10 ‘டிப்ஸ்’ இதோ..

*பருப்பு அவிக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் எளிதாக வெந்துவிடும்.
* நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எளிதில் கெடாது.
* இட்லிக்கு உளுந்து அரைக்கும்பொழுது ‘ஐஸ்வாட்டர்’ விடவும். மாவு சூடாகாமல்… இட்லி பூப் போன்று வரும்.
* சப்பாத்தி மிருதுவாக இருக்க… வெதுவெதுப்பான பால் விட்டு மாவு பிசையுங்கள்.
*குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து சேர்த்து, கொதிக்க விட்டு இறக்குங்கள்.
* சர்க்கரைப்பாகில் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சீக்கிரம் கெட்டியாகாது.

கேரள ஸ்டைல் ஸ்பெஷல் பச்சரிசி நெய்யப்பம் வீட்டிலேயே பண்ண முடியுமா!

*தோசைக் மாவு அரைக்கும் போது கொஞ்சம் வெண்டைக்காயும் சேர்த்து போட்டுட்டு அரைச்சா தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.
* மோர் குழம்பு செய்யும் போது சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் ருசியே தனி.
* மீன் சமைக்கும் போது எலுமிச்சை சாறு துளி விட்டிங்கன்னா ருசியாகவும் இருக்கும். மீனும் கருக்காது.
* கடலையை வறுப்பது போல் கூழ்வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்தெடுக்கலாம். பெரிதாகவே பொரியும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews