டிஎன்பிஎஸ்சி குரூப் 4: பிரித்தெழுதுக- பகுதி 2

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

பிரித்தெழுதுக:

அலகிலா – அலகு + இலா

விருந்தொரால் – விருந்து + ஒரால்

முந்நூறு    – மூன்று + நூறு

பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்

ஒலியாக்கி – ஒலி   + ஆக்கி

சொற்றொடர் – சொல் + தொடர்

நன்றென்றல் – நன்று  +  என்றல்

தன்னாடு – தன்  +  நாடு

முந்நீர்; – மூன்று +  நீர்

வெண்துகில் – வெண்மை +  துகில்

பல்லாயிரம் – பல   +  ஆயிரம்

செவிக்குணவு – செவிக்கு  +  உணவு

செவிச்செல்வம் – செவி +  செல்வம்

நாட்குறிப்பு – நாள்  +  குறிப்பு

பேரிடர் – பெருமை  +  இடர்

உறுப்புரிமை – உறுப்பு +  உரிமை

அந்நாடு – அ +  நாடு

உடலுழைப்பு – உடல் +  உழைப்பு

பல்கலை – பல  +  கலை

எந்நலம்     – எ  +  நலம்

துலையல்லார்   – துலை  +  அல்லார்

பெருந்தலைவர் – பெருமை +  தலைவர்

அந்நாளில் – அ +  நாளில்

நாளன்று – நாள் +  அன்று

பேரிடி – பெருமை +  இடி

கருங்கோல் – கருமை +  கோல்

பெருந்தேன் – பெருமை +  தேன்

இந்நாளில் – இ +  நாளில்

செந்நெல் – செம்மை +  நெல்

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.