உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படமானது வசூலில் மாஸ் காட்டியது. குறிப்பாக இப்படம் ஒடிடி-யில் வந்த பிறகும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் மாலிக் என்ற படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் கமல்ஹாசன் வைத்து அடுத்த படத்தை புக் செய்வதாக கூறியுள்ளார். குறிப்பாக இந்தியன் 2 படம் முடிந்த பிறகு இந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பித்து விடும் என்று கூறுகின்றனர்.
இந்த படத்தில் பகத் பாசில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்க இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட அவருடிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திகைத்து போய் உள்ளனர். மேலும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.