நடத்தையில் சந்தேகம்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எம்.கே.பி.நகரைச் சேர்ந்த சார்லஸ் ராஜ்குமார் என்பவர் மனைவி ரமணியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதுடன், நடத்தையில் சந்தேகம் கொண்டு வெட்டிக் கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் ராஜ்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முகமது ஃபரூக் தீர்ப்பு வழங்கினார்.

அபராதத் தொகையில் ரமணியின் தாய் – தந்தைக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபாயை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிதியில் இருந்து ரமணியின் பெற்றோருக்கு நிவாரணம் பெற்று கொடுக்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் பரிந்துரை வழங்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment